Thursday, March 10, 2016

ஆடுகளமாகிய குளம்

அன்று

அலங்கரித்த தெப்பம் சுற்றியதும் இங்கு தான்
நீராடியதும், நீச்சல் கற்றதும் கூட இங்கு தான்
கூட்டமாக வரும் பறவைகள் தன் தாகத்தை தீர்த்ததும் இங்கு தான்
இறங்கினால் மூழ்கிடுவோம் என்ற பயம் வந்ததும் இங்கு தான்.

 



இன்று

ஓடி விளையாடும் கூட்டம் ஒரு பக்கம், மட்டையடிக்கும் கூட்டம் ஒரு பக்கம்
ஒரு விளையாடுகளம் போலவே மாறியிருந்தது எங்கள் ஊர் குலம்
தேடிப் பார்த்தும் தெரியவில்லை ஒரு துளி நீர் கூட
வருணனும் வரவில்லை என்றால், இதற்கு வழிகாண ஊர் மக்களுக்கும்
மனம் வரவில்லை போல.

பட்டாபோடாமல் பாதி உயிருடன், நீரை தேடி தன் நினைவில் நீந்துகிறது

ஆடுகளமாகிய எங்கள் ஊர் குளம்.



No comments:

Post a Comment

Total Pageviews