என் இதயம் தேடும் இடம்:
ஆயிரம் பறவைகள் எழுப்பும் ஒலிகளுக்கிடையிலும்
அமைதிக்கு உயிர் கொடுத்த இடம்,
ஓடினாலும், நின்றாலும்
கலப்படத்தை கண்டிடாத நீர்தேக்ககங்களின் உறைவிடம்,
இங்கு அனைவரும் சேர்த்துவைப்பதும், செலவு செய்வதும் காற்றை மட்டும் தான்,
மனிதக்கைகளால் மாற்றி அமைக்கப்படாமல் இருக்கும்
எல்லா இடமுமே நான் சொன்ன இடம்; இயற்கையின் சொந்த இடம். …!!!
என்று மனிதன் தன் ஆசையை சொல்லி முடிக்க,
இயற்கை கொடுத்த பதில் இது:
இயற்கை கொடுத்த பதில் இது:
தேடி எங்கு செல்வது என்ற கவலை வேண்டாம்; நீ யோசிக்கும் போதே தெரியவில்லையா? நான் உன் மனதில் வளர்ந்துவிட்டேன் என்று.
இயற்கைநேயத்தோடு, கொஞ்சம் உன் மண்ணிலும் இடம் கொடு; உனக்காகவே
உருவம்பெற உயிருடன் காத்துக்கிடக்கிறேன்...!!!