Thursday, March 10, 2016

அவதாரம்


நடந்தது
தந்தையின் பணியிடம் குடிகாரனாக அரசு மதுபான கடையில்,
தாயின் சமையல் கலையோ பணக்கார வீட்டின் அடுப்பறையில்,
மகனோ...? படிப்பின் மீது கொண்ட ஈர்ப்பினால் பள்ளியரையில்…!!!

நடப்பது
மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டார் அப்பா,
மனநிலை மாற்றத்தினால் மருத்துவமனையில் அம்மா,
மருத்துவ செலவிற்கும்; ஒரு வேலை உணவிற்க்கும்
அவன் எடுத்த அவதாரம் தான் இது


"குழந்தை தொழிலாளி


ஆடுகளமாகிய குளம்

அன்று

அலங்கரித்த தெப்பம் சுற்றியதும் இங்கு தான்
நீராடியதும், நீச்சல் கற்றதும் கூட இங்கு தான்
கூட்டமாக வரும் பறவைகள் தன் தாகத்தை தீர்த்ததும் இங்கு தான்
இறங்கினால் மூழ்கிடுவோம் என்ற பயம் வந்ததும் இங்கு தான்.

 



இன்று

ஓடி விளையாடும் கூட்டம் ஒரு பக்கம், மட்டையடிக்கும் கூட்டம் ஒரு பக்கம்
ஒரு விளையாடுகளம் போலவே மாறியிருந்தது எங்கள் ஊர் குலம்
தேடிப் பார்த்தும் தெரியவில்லை ஒரு துளி நீர் கூட
வருணனும் வரவில்லை என்றால், இதற்கு வழிகாண ஊர் மக்களுக்கும்
மனம் வரவில்லை போல.

பட்டாபோடாமல் பாதி உயிருடன், நீரை தேடி தன் நினைவில் நீந்துகிறது

ஆடுகளமாகிய எங்கள் ஊர் குளம்.



அன்புடன் - அப்துல் கலாமுக்கு



11-12-13 சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்த அப்துல் காலம் ஐயா அவர்களை நேரில் பார்த்த அன்று எழுதியது:

கடவுளை பார்த்த மகிழ்ச்சி எனக்கு;
வாழும் விவேகானந்தரே என்று உங்களை வாழ்த்த தொடங்கி விட்டது என் மனம்.

மண்ணுக்குள் ஒரு சோதனையோட்டம், அதில் சாதனை படைத்தவர் நீங்கள்; இதை அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறந்து இருக்கலாம். ஆனால் எங்கள் இந்திய மண் இந்த சாதனையை என்றுமே தன் நினைவில் வைத்து இருக்கும்.

இந்திய இளைஞர்களே கனவு காணுங்கள் என்ற உங்கள் வாசகத்தை பலமுறை வாசித்திருக்கிறேன் அதன் பொருளை  உணராமல்; ஆனால் இன்று உங்கள் பேச்சால் உணர்ந்தேன். எங்களுக்காகவே நீங்கள் பலநாட்கள் தூக்கத்தை தொலைத்து கண்டெடுத்த கனவு வாசகம் இதுவென்று.

ஒரு விதையின் மாற்றத்தை பார்க்க வேண்டும் என்றால், அதை மண்ணில் புதைக்க வேண்டும், இது அனைவருக்கும் தெரிந்தது

இந்த இந்திய நாட்டின் மாற்றத்தை பார்க்க வேண்டும் என்றால், நல்ல எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும் என்ற சூட்சமத்தை உணர்ந்தவரும் செயலில் செய்து காட்டியவரும் நீங்கள்; இன்று எங்களுக்கு செய்ய தொடங்குங்கள் என்று கற்று கொடுத்தவரும் 
நீங்கள்!

ஒளியாக இருக்கும் உங்கள் எண்ணம், உளியாக இருந்து நம் இந்தியாவிற்கு நல்ல உருவத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் உணர்ந்தோம்; கண்டிப்பாக உங்களைப் பின் 
தொடர்வோம்.

என்பத்திரெண்டில் கூட எப்படி உங்களுக்கு மட்டும், இப்படி ஒரு ஆற்றல்; உங்கள் பேச்சை 
கேட்ட பிறகு ஒன்று மட்டும் எங்களுக்கு தெளிவாக தெரிந்தது;


நம் இந்திய குழந்தைகளுக்காகவே பிறந்த குழந்தை நீங்களென்று!” 

Total Pageviews