Thursday, March 10, 2016

அன்புடன் - அப்துல் கலாமுக்கு



11-12-13 சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்த அப்துல் காலம் ஐயா அவர்களை நேரில் பார்த்த அன்று எழுதியது:

கடவுளை பார்த்த மகிழ்ச்சி எனக்கு;
வாழும் விவேகானந்தரே என்று உங்களை வாழ்த்த தொடங்கி விட்டது என் மனம்.

மண்ணுக்குள் ஒரு சோதனையோட்டம், அதில் சாதனை படைத்தவர் நீங்கள்; இதை அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறந்து இருக்கலாம். ஆனால் எங்கள் இந்திய மண் இந்த சாதனையை என்றுமே தன் நினைவில் வைத்து இருக்கும்.

இந்திய இளைஞர்களே கனவு காணுங்கள் என்ற உங்கள் வாசகத்தை பலமுறை வாசித்திருக்கிறேன் அதன் பொருளை  உணராமல்; ஆனால் இன்று உங்கள் பேச்சால் உணர்ந்தேன். எங்களுக்காகவே நீங்கள் பலநாட்கள் தூக்கத்தை தொலைத்து கண்டெடுத்த கனவு வாசகம் இதுவென்று.

ஒரு விதையின் மாற்றத்தை பார்க்க வேண்டும் என்றால், அதை மண்ணில் புதைக்க வேண்டும், இது அனைவருக்கும் தெரிந்தது

இந்த இந்திய நாட்டின் மாற்றத்தை பார்க்க வேண்டும் என்றால், நல்ல எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும் என்ற சூட்சமத்தை உணர்ந்தவரும் செயலில் செய்து காட்டியவரும் நீங்கள்; இன்று எங்களுக்கு செய்ய தொடங்குங்கள் என்று கற்று கொடுத்தவரும் 
நீங்கள்!

ஒளியாக இருக்கும் உங்கள் எண்ணம், உளியாக இருந்து நம் இந்தியாவிற்கு நல்ல உருவத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் உணர்ந்தோம்; கண்டிப்பாக உங்களைப் பின் 
தொடர்வோம்.

என்பத்திரெண்டில் கூட எப்படி உங்களுக்கு மட்டும், இப்படி ஒரு ஆற்றல்; உங்கள் பேச்சை 
கேட்ட பிறகு ஒன்று மட்டும் எங்களுக்கு தெளிவாக தெரிந்தது;


நம் இந்திய குழந்தைகளுக்காகவே பிறந்த குழந்தை நீங்களென்று!” 

No comments:

Post a Comment

Total Pageviews