Sunday, February 18, 2018

சோலைவனத் தோட்டத்து விவசாயிகள்-முழு கதையின் தொகுப்பு

அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்...!!!
“சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை”

இந்த திருக்குறள் நமக்கு கூறும் முக்கியமான செய்தி, உலகில் உள்ள எல்லா தொழில்களுக்கும் அடிப்படையான தொழில் விவசாயம் தான். ஆகையால் அதுவே மிகச் சிறந்த தொழிலாகும்.
அந்த மிகச் சிறந்த தொழிலை பற்றி பள்ளி மாணவர்களிடம் பேச வேண்டும் என்ற ஒரு ஆவலுடன் ஓராண்டுக்கு முன்பே எழுதி முடித்து  முழு   உருவம் பெற்றது, இந்த சிறு கதை தொகுப்பு. இன்று நம் இந்திய நாட்டில் உள்ள 1650 அரசு நூலகத்திற்கும் 2500 பள்ளிகள் மற்றும் வாசகர்களை சென்றடையும் அறிவுக்கண் அறிவியல் மாத இதழில் அச்சிடப்பட்டு, செப்டம்பர் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை ஆறு மாதங்கள் தொடர் கதையாக வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பை தேர்வு செய்த ஆசிரியர் குழுவிற்கு இங்கு நன்றி கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
விவசாயத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று நான் எடுத்துக்கொண்ட இடம் தான் இந்த “சோலைவனத் தோட்டத்து விவசாயிகள்”
விவசாயம் பற்றிய அறிவையும், அதன் பயன்களையும் இன்று பள்ளியில் பெறுவது என்பது கொஞ்சம் கடினமே  என்று உணர்ந்தது மட்டுமல்லாமல்; எப்படியாவது விவசாயம் பற்றிய அறிவை பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று தன் பயணத்தை தொடங்குகிறார் இந்த கதையின் நாயகன் “நமது விவசாயி”
வாருங்கள், நாமும் அவருடன் சேர்ந்து பயணிப்போம்...

இயற்கைநேயத்தோடு
தி. வி. சதீஸ் சுந்தர்

மயிலாடுதுறை



































No comments:

Post a Comment

Total Pageviews